Pages

Wednesday, November 7, 2018

உலக நாடுகளில் பாம்பு வழிபாடு

உலக நாடுகளில் பாம்பு வழிபாடு
பண்டைக் காலமுதல் உலகின் பல பாகங்களிலும் பாம்பை வழிபாடும் வழக்கம் இருந்து வருகின்றது. பண்டைய மனித இனங்கள் தோன்றிய இடங்கள் அனைத்திலும் சிறுகவோ, பெருகவோ பாம்பு வணக்கம் தோன்றி இருக்கின்றது. உலகில் நாகம் பற்றிக் குறிப்பிடாத மதமோ கலாசாரமோ கிடையாது. ஆபிரிக்கா, மெக்சிக்கோ, சீனா, அவுஸ்ரேலியா, ஐப்பான்,

நாகவழிபாட்டின் தோற்றம் வளர்ச்சி

நாகவழிபாட்டின் தோற்றம் வளர்ச்சி
இறைவழிபாட்டில் ஒருவகை இயற்கை வழிபாடு. அன்பின் அடிப்படையிலும், அச்சத்தின் அடிப்படையிலும் இந்த வழிபாடு ஏற்பட்டது. இயற்கை வழிபாட்டிலும் பல வகையுள்ளது. அதில் ஒரு பிரிவு தான் விலங்கு வழிபாடு. நடப்பவை, ஊர்பவை, பறப்பவை என்ற இனங்களில் சிலவற்றை மக்கள் தெய்வமாக கருதி வழிபடுகின்றனர். பசுவை கோமாதாவாக
வழிபடுகின்றனர். பாம்பை தெய்வ அம்சமாக கருதி வழிபடுகின்றனர். இதில் உள்ள மற்றொரு சிறப்பு என்னவெனின் பசுவை மனிதனின் அன்பால் வழிபட்டான். பாம்பை அச்சத்தால்  வணங்கினான். பாம்பு மனிதனுக்கு அச்சத்தை ஏற்படுத்தினாலும் பாம்பைக் கொல்வது பாவம் என்ற கருத்து இன்றும் நிலவுகின்றது. பாம்பு புற்றை அகற்றுவது பாவம் என்று இன்றும் முன்னோhர்கள் கூறி வருகின்றனர். பாம்புகளில் நல்லது என அழைக்கப்படுவது நல்ல பாம்பு மட்டும் தான்.
மனிதன் தொடக்கத்தில் காடுகளிலும் மலைக் குகைகளிலுமே திரிந்தான், வாழ்ந்தான் அப்போது அவனை அச்சுறுத்தியதியவை கொடிய விலங்குகள் அவற்றில் பாம்பும் ஒன்றாகும். அவற்றிலும் பாம்பு அவன்; அருகிலிருந்து அடிக்கடி அச்சுறுத்திய ஒன்றாகும். நீரிலும் அது, நிலத்திலும் அது காட்டிலும் அது மேட்டிலும் அது எங்கும் எதிலும் இருந்த பாம்பே மனிதனது ஆதி வழிபாட்டு கடவுளாக உருக் கொண்டிருத்தல் வேண்டும்.

தீவகம் ஒரு வரலாற்று நோக்கு.

தீவகம் ஒரு வரலாற்று நோக்கு.

இலங்கையின் வடமேற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள தீவுத் தொகுதியே தீவகம் என அழைக்கப்படுகின்றது. மண்டைதீவு, வேலணைத்தீவு, புங்குடுதீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு, நெடுந்தீவு, காரைதீவு ஆகிய மக்கள் குடியிருப்பினைக் கொண்டிருக்கும் எட்டுத்தீவுகளையும் கண்ணாத்தீவு, பாலைதீவு, கற்கடகத்தீவு, நரையான்பிட்டி, சிறுத்தீவு, கச்சதீவு, போன்ற மக்கள் வாழாத தீவுகளையும் உள்ளடக்கிய தீவுக்கூட்டங்களை தீவாகத்திற்குள் அடக்கலாம். தீவுகப் பிரதேசமானது பல்லாண்டு காலமாக பௌதீக தன்மையில் வேற்றுமையில் ஒற்றுமைத் தன்மையைக் கொண்டிருக்கின்றது. இத்தகைய பண்புகளைக் கொண்டிருக்கும் தீவகப்பகுதிகள் நான்கு நிர்வாகப் பரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு, தீவகப்பகுதி வடக்கு, தீவகப்பகுதி தெற்கு, காரைதீவு என்பனவாகும். வேலணைத்தீவையும், மண்டைதீவையும் ஒரு தீவாக அழைப்பதனால் தீவுப்பகுதிகளை சப்த தீவுகள் என்று அழைப்பது வழக்கம். தீவகப் பகுதியின் வரலாற்றுத் தொன்மையினையும் அதன் சிறப்பினையும் இலக்கிய, தொல்லியல் சான்றுகள் ஊடாக அறிய முடிகின்றது.

நயினாதீவு பிரதேசத்தின் வரலாற்றுப் பழமை

நயினாதீவு பிரதேசத்தின் வரலாற்றுப் பழமை
யாழ்ப்பாண நகரத்திற்கு தென் மேற்கே காணப்படும் சப்த தீவுகளில் கடல் நடுவே தனிப்பெரும் சரித்திரப் புகழ் வாய்ந்ததாய் கம்பீரமாய் தோற்றமளிக்கும் தீவே நயினாதீவாகும். இந்த தீவு யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக தென்மேற்குத் திசையில் 23 மைல் தொலைவில் அமைந்துள்ளது. நயினாதீவானது 5.7 சதுர கிலோ மீற்றர் பரப்பளவினைக் கொண்டதாக காணப்படுகின்றது. 40 கிலோ மீற்றர் நீளமும் 12 கிலோ மீற்றர் அகலமும் 80 கிலோ மீற்றர் சுற்றளவினையும் கொண்டுள்ளது. அதன் அமைவிடமானது 9° 37' 9.66" அகலாங்கிலும் 79° 46' 18.99" நெட்டாங்கிலும் காணப்படுகின்றது.

Wednesday, September 5, 2018

பிறப்பு முதல் ஏடு தொடக்குதல் வரையான சடங்குகள்

.
குழந்தைச் செல்வம் மனித வாழ்வில் மிகவும் இன்றிய மையாகதாகக் கருதப்படுகிறது. இறை அருளால் மனிதனுக்குக் கிடைக்கப் பெறும் தலையாய செல்வங்களுள் குழந்தைச் செல்வமும் ஒன்று என அனைவராலும் நம்பப்படுகிறது. பிறந்த குழந்தைக்கு வளனும் நலனும் வேண்டிச் செய்யப்படும் சடங்குகள்"பிறப்புச் சடங்குகள்" எனப்படும் வள்ளுவர் குழந்தைச் செல்வத்தின் சிறப்பை எடுத்துக் காட்டும் போது
“ குழாலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச் சொற் கேளாதவர்” (குறள்.66)
' படைப்புப் பல படைத்து " எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலடிகளும் குழந்தைப் பேற்றின் சிறப்பை விளக்குவதாக அமைந்துள்ளது.

சடங்கு ஓர் அறிமுகம்

மனிதனும் மனித சமூகமும் வாழ்க்கையை நெறிப்படுத்த ஏற்படுத்திக் கொண்ட ஒர் ஒழுக்கம் சடங்கு என்று சொல்லாம். புனிதத் தன்னையின்பால் மக்கள் மேற்கொள்ளும் நடத்தைகோலங்களின் தொகுப்பே சடங்கு. நம்பிக்கைகள் கருத்து வடிவம் கொண்டவை சடங்குகள் செயல் வடிவம் கொண்டவை நம்பிக்கைகள் செயல் வடிவம் பெறுகையில் சடங்கு வடிவத்தை அடைகின்றது என்கிறார் தே.ஞானசேகரன்.


Friday, June 16, 2017

அசோகனின் தர்மக் கொள்கைகள்


                   பண்டைய உலக வரலாற்றிலே நற்பணியாற்றிய மாபெரும்
அசோகர்
மன்னாக
 அசோகன் போற்றப்படுகின்றன்.இந்திய வரலாற்றிலே முக்கிய இடம்பெற்ற அசோகன் பிற்பாடு தன்சமயம் பரப்பும்நடவடிக்கைகளால்  உலகளாவிய ரீதியில் புகழ் பெற்றான் . கி . மு 273 - 232 வரையான காலப் பகுதியில் மௌரிய சம்ராஜ்யத்தை ஆண்ட சந்திர குப்த மௌரியரின் மகனான பிந்துசாரனின் புதல்வர் ஆவார்.

உலக நாடுகளில் பாம்பு வழிபாடு

உலக நாடுகளில் பாம்பு வழிபாடு பண்டைக் காலமுதல் உலகின் பல பாகங்களிலும் பாம்பை வழிபாடும் வழக்கம் இருந்து வருகின்றது. பண்டைய மனித இனங்கள் தோன்...